Wednesday, May 14, 2014


* விறகுகளைச் சுமந்து வந்த
ஆல மரம்
அம்மா.
* சிறகுகளை தானம் செய்த
தேவதை.
* காரிருள்,
உன் கை பிடித்து நின்றால் 
நகர்ந்து வழிவிடும்.
* துப்பாக்கி ஏந்ததா
போராளி..
* என்னிடம் நீ
அடிக்கடி சொல்லும் பொய்..
"நான் அழலயே"
* கடவுள்கள் செய்ததாக கூறப்படும்,
அத்தனை அற்புதங்களையும்
நீ செய்து .. நான் பார்த்திருக்கிறேன்..
* நான் கண் திறந்தது
முதல்
இந்த கவித எழுதுறது வரைக்கும்
எல்லா மூலதனமும்
உன் வியர்வைதானம்மா
விறகுகளைச் சுமந்து வந்த
ஆலமரம்
. அம்மா

Wednesday, July 20, 2011

சில நொடி நட்பு!!!

எங்கிருந்தோ வீழ்த்தேன்... 
இடையில் கரம் பற்றி காப்பாற்றினாய்... 
யார் சொல்லி என்னை உதிர்த்தாய்.. மரயிலையாய் நீ மழைத்துளியாய் நான்...

Monday, November 29, 2010

ஆதியும் அந்தமும்

என்னென்று தெரியாமல்....
 இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்... 
நீ கிடந்து அழுகும் பொது...
 உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும் ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ... 

 கால ஏணி - ஏறிச் சலித்த பின்.... 
இயற்கையும் செயற்கையும் உனை மென்று தின்று...
. "பிரயோசனம்" அற்ற சக்கையாய்,
 உலகக் கழிவுகளின் கணக்கில் சேர்த்த பின்னும்,
 
என்னென்று தெரியாமல்.... இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்... நீ கிடந்தது அழுகும் போது... உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும் ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...

Friday, November 19, 2010

ரகசியங்கள்

சத்தமிடாத முத்தங்களாய்.. உன் பார்வைகள்...

Thursday, April 30, 2009

தூது

கடல் கொண்ட அத்தனை துளியும் அலையாய்; 
ஒருமுறையேனும் கரையை தொட்டிருக்கும்.. 
நான் அனுப்பிய அத்தனை அலையில் ஒன்றுகூடவா உன்னைத் தொடவில்லை?

அத்தனை உயிரும் ஒன்றுதான்.. 
ஒத்துகொண்டேன் உன்னை பார்க்கும் வரை... 
நீ கொஞ்சம் உயர்வு தான்... 

வார்த்தைகளின் அர்த்தம் மாறியது... ஆழமானது... அழகானது... உயிர்.. நான்.. நீ.. இன்னும் பல... 

நண்பர்களின் கூட்டத்துக்குள் நான் மட்டும் தனியாய்.. பேச்சுப் போட்டியில்.. மௌனமாய் நிற்பது போல் உன்முன்னே நான்.... வாழ்க்கை ஆயிரம் கேள்விகளானது.. ஒரே பதிலாய் நீ .... ஒத்துக்கொள்ள வேண்டாம்... புரிந்துகொண்டாள் போதும்...